இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட அக்கரப்பத்தனை மக்களுக்கு பசும் பொன் வீடமைப்பு வழங்கள் -படங்கள்

க.கிஷாந்தன்-

யற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் 23 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 14.02.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் அவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் 23 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு “ஹசிஸ் புரம்” என பெயர் சூட்டி வீடுகளை அமைச்சர் திகாம்பரம் 14.02.2016 அன்று கையளித்தார்.

இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உட்பட பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறண்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -