ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக, குற்றம்சாட்டி, அந்நாட்டின் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன.
இதனையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு முதல், அந்த நாட்டில் இருந்து எண்ணை கொள்வனவு செய்வதை இலங்கை நிறுத்தியிருந்தது.
இந்தநிலையில் தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளமையால் மீண்டும் எண்ணெய் கொள்வனவு தொடர்பில் அந்த நாட்டுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய அமைச்சு தெரிவித்துள்ளது.AD
