சிலாவத்துறை ஆட்டோச் சாரதி M.சாஜிர் என்பவர் மீது முருங்கனில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.படுகாயமடைந்த இவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விடயம் பொலீசாரிடம் முறையிடப்பட்டும் உரிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.மேலும் சிலாவத்துறை ஆட்டோச் சாரதிகட்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடப்படுவதாகவும் அறிகிறோம்.
வடமாகாண முஸ்லிம்களின் மீள் வருகையை விரும்பாத ஒரு பயங்கரவாத அடிவருடிகளின் செயற்பாடே இதுவாகும். சிலாவத்துறையிலிருந்து முருங்கனுக்கு பயணிகளை ஏற்றிவரும் ஆட்டோச்சாரதிகள் முருங்கனில் இருந்து வெறுமையாக யாரையும் ஏற்றாமலே செல்ல வேண்டும் எனக் காட்டுமிராண்டிச்சட்டம் எதுவுமுண்டா?
“பயணிகள் விரும்பும் வாகனத்தில் பயணம் செல்லலாம்”இது அவர்களின் உரிமை,
முருங்கனில் நடைபெறும் இச் செயற்பாட்டை தடுக்க பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும்.முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தில் உடன் தலையிட வேண்டுமென மக்களை எதிர்பார்க்கிறனர்
