ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யபட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு சற்றுமுன் தெரிவித்தது.
தற்போது கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருக்கும் ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் போலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.
