அய்ஷத் ஸெய்னி-
அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளி வாயலின் மேல் தள வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
இருந்த போதும் மேல்தள வேலைகளை முற்றாக பூர்த்தி செய்ய நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே அல்லாஹ்வின் இல்லத்தை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு தனவந்தர்களை கட்டிட குழு கோருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"யார் அல்லாஹ்வுக்காக ஒரு வீட்டை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்".
*எனவே நிலையான தர்மத்துக்கு உதவுவதன் மூலம் சுவர்க்கம் நுழைவோம்.






