சிங்க லே அமைப்பின் முக்கியஸ்தர்கள் நேற்று காலை கொழும்பிலிருந்து கண்டிக்கு வாகனப் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடிய சிங்க லே அமைப்பின் முக்கியஸ்தர்கள் முதலில் அங்கு அதிஷ்டான வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனையடுத்து பொரளை ஊடாக கண்டிக்கான வாகனப் பேரணி புறப்பட்டுச் சென்றது.
சிங்க லே அமைப்பினர் குறித்த வாகனப் பேரணி குறித்து கடந்த சில நாட்களாக பெருமளவில் பிரச்சாரப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் சிங்க லே அமைப்பினர் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை.
நேற்று பிற்பகல் கண்டி தலதா மாளிகையை சென்றடைந்த சிங்க லே அமைப்பினர், அங்கு இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் தமது அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளனர்.




