ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி வடிகான்களில் குப்பை, கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், பாதசாரிகளும் பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருவதாக எமது செய்தியின் ஊடாக அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டுவந்தோம் .
இப் பிரச்சினைய கவனத்தில் கொண்டு இன்று உரிய இடத்திற்கு விரைந்த காத்தான்குடி சுகாதார அதிகாரி டாக்டர் U.L.M. நஸ்ரூத்தீன் மற்றும் சுகாதார பரிசோதகர் M.றஹ்மத்துல்லாஹ் ஆகியோருடன் காத்தான்குடி நகர சபை செயளாளர் J.சர்வேஷ்வரன் அவர்களின் வேண்டு கோளில் நகர சபை கழிவகற்றல் ஊழியர்களால் உடனடியாக வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.
எமது செய்தியை கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எமது நன்றிகள்.



