பாலமுனை ட்றை ஸ்டாரின் "நட்சத்திரங்களின் கொண்டாட்டம்" முப்பெரும் விழா!

 அய்ஷத் ஸெய்னி-

பாலமுனை ட்றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திரங்களின் கொண்டாட்டம்- கெளரவிப்பு விழா, கலை விழா, வெளியீட்டு விழா என முப் பெரும் விழாவாக பாலமுனை இப்னு சீனா வித்தியாலய எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ஆராதனை மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

கழகத் தலைவரும் இலங்கை துறைமுக அதிகார சபை உத்தியோகத்தருமான எம்.எச்.எம்.ஜெஸ்பர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ் அவர்கள் பிரதம அதியாக கலந்து சிறப்பித்ததோடு, கெளரவ அதிதிகளாக விளையாட்டுத் துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி எம.ஏ.அன்ஸில் அவர்களும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் அவர்களும் அம்பாரை மாவட்ட மெயவல்லுனர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜிதீன் அவர்களும் மற்றும் ஏனைய அதிதிகளாக கலாபூசணம் கவிஞர் பாலமுனை பாறூக்,கலாபூசணம் கவிஞர் அன்புடீன், கலாபூசணம் பாலமுனை ஆதம், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.பாறூக் ஜே.பி, அதிபர் கே.எல்.எம்.உபைத்துல்லா, கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இப்றாஹிம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் நாகூர் ஹனிபா புகழ் மருதமுனை கமால் அவர்களின் இஸ்லாமிய கீதமும் விருந்தளிக்க ட்றை ஸ்டாரின் சிரேஷ்ட சாதனை வீரர்களான எம்.ஏ.அஜ்வத், எம்.ஏ.ஜாபிர், கே.எல்.உபைத்துல்லா, எம்.எஸ்.எம்.இப்றாஹிம்,எம்.ஏ.அன்ஸில், என்.ரி.ஏ.அனஸ், கே.எல்.எம்.ஜிப்ரி, எம்.ஐ.ஏ.மனாப்,ஐ.எல்.எம்.பாயிஸ், மர்ஹூம் எம்.ஆர்.நியாஸ், ஐ.எல்.எம்.பாரிஸ்,எம்.ஏ.பிர்னாஸ் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜிதீன் அவர்களும் பாடகர் மருதமுனை கமால் அவர்களும் பொண்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்..

ட்றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 2016 ம் ஆண்டுக்காண கலண்டர் வெளியிடப்பட்டதுடன் அனைத்து அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -