இக்பால் அலி -
ஆசிரியர் ஆலோசகர் சேவையை தனியான நிரந்தச் சேவையாக மாற்றம் வேண்டும் எனக் கோரி இன்று 27-01-2016 வடமேல் மாகாண கல்விப் பணிமனைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைளில் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 2000 பேர் அளவில் இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் கலந்து கொண்டனர். தீர்மானம் எடுக்கப்பட்ட ஆசிரியர் ஆலோசகர் சேவையை தனியாதொரு நிரந்தச் சேவையாக மாற்றித் தருமாறு கோரி வடமேல் மாகாண கல்விப் பணிமனை மற்றும் வடமேல் முதல் அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னாலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்களைப் படங்களில் காணலாம்.





