வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!

டகவியலாளர் பிரகீத் எக்னளியகோடவின் மனைவியை நீதிமன்றில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை வெலிகடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர், இன்று மாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

நேற்றிரவில் இருந்து அவருக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பில் சுகயீனம் கானப்பட்டு வந்த காரணத்திலே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

நேற்றிரவே வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமா என சிறைச்சாலை அதிகாரிகள் வினவிய போதும் அதனை மறுத்து வந்த அவர் இன்று மாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -