வெலி­மடை நகரில் முஸ்லிம் ஹோட்­ட­லொன்­றிற்குள் புகுந்து தாக்குதல்..!

வேனொன்றில் வந்த இளை­ஞர்கள் சிலர் நகரின் ஹோட்­ட­லொன்­றிற்குள் புகுந்து அங்­குள்­ள­வர்­களை கடு­மை­யாகத் தாக்­கி­விட்டு தப்­பிச்­சென்ற சம்­ப­வ­மொன்று வெலி­மடை நகரில் நேற்று முன்தினம் இரவு 11.00 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது. 

தாக்­கப்­பட்ட இரு தமிழ் இளை­ஞர்­களும் ஒரு முஸ்லிம் இளை­ஞ­ரு­மாக மூவர் வெலி­மடை அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

வேனொன்றில் வந்த இளை­ஞர்கள் சிலர், வெலி­மடை நகரில் முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான ஹோட்­ட­லொன்­றிற்கு முன்னால் வேனை நிறுத்தி, தமக்கு சிக­ரட்­டுக்கள் தரு­மாறு ஹோட்­ட­லி­லுள்­ள­வர்­களை மிரட்­டினர். இதை­ய­டுத்து ஏற்­பட்ட முறுகல் நிலை மோத­லாக மாறி­யது. 

அவ்­வே­ளை­யி­லேயே, வேனில் வந்­த­வர்கள், ஹோட்­டலில் உள்­ள­வர்­களை கடு­மை­யாக தாக்­கி­விட்டு சென்­றனர். 

தாக்­கப்­பட்­ட­வர்கள் வெலி­மடை அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இத்­தாக்­குதல் தொடர்­பாக வெலி­மடை பொலி­ஸா­ருக்கு செய்­யப்­பட்ட புகா­ரை­ய­டுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -