கந்தளாயில் மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு அபராதம் விதிப்பு..!

எப்.முபாரக்-
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 03 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

திருகோணமலை கந்தளாய் லைட்வீதியைச் சேர்ந்த குறித்த நபர், ஞாயிற்றுக்கிழமை (24) கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்த போது மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 03 மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -