சியாத் அகமட்லெப்பை-
பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அல்பி ஜூவலரியின் பின் கதவை உடைத்து நகைகளை திருடச்சென்ற திருடன் சீ.சீ.டி கெமரா மற்றும் சில பொருட்களையும் திருடிச் சென்றிருப்பதாகவும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
முறைப்பாட்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார்களினால் மேற்கொண்ட விசாரனையின் போது நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் (11) காலை எட்டு மணியலவில் கடையைத் திறக்கச் சென்றிருந்த போது பின் பக்கமாக இருந்த கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும் சீ.சீடி கெமரா உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து பொலிஸார்கள் திருடர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



