
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவா் பலஸ்தீன் மற்றும் இஸ்லாமியா்களது நண்பன வெளி உலகுக்கு காட்டி நின்றாா். பலஸ்தீனத்தில் அவா் பெயரில் பாதை ஒன்றை அமைத்து அங்கு போய் திறந்து வைத்தாா்.
அவரது ஆட்சிக் காலத்தில் இருந்த வெளிநாட்டு அமைச்சுக்கு கூட இதனை தடுத்து நிறுத்த முடியாது போகிவிட்டது. மரண தண்டனை விதித்து மரணமான பின்பே அப்போதேய வெளிநாட்டு அமைச்சருக்கு அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமேதாச கூறினாா்.
மேற்கண்டவாறு (31)ஆம் திகதி அம்பலாந்தோட்ட பிரதேசத்தில் வீடமைப்பு நிதியுதவிகளை வழங்கி வைத்து அங்கு உரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்
அவா் தொடா்ந்து உரையாற்றுகையில்;
ஜனாதிபதி மைத்திரி - பிரதமா் ரணில் தற்போதைய ஆட்சியி்ன் கீழ் உள்ள வெளிநாட்டு அமைச்சு அண்மையில் கொழும்பைச் சோ்ந்த ஒரு வீட்டுப் பணிப்பெண்னுக்கும் கல்லெறிந்து மரணதண்டனை விதிக்க்ப்பட்ட அந்த பெண்னை மரண தீா்ப்பில் இருந்து அந்தப் பெண்னின் உயிரை காப்பாற்றியுள்ளது. இது தான் அரபு நாடுகளுக்கு எல்லாம் சென்று உலகில் நண்பன் என்று காட்டி கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு நல்லதொரு உதாரணமாகும்.
அது மட்டுமல்ல மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்களை மத ரீதியாகும், இன ரீதியாகும், பிரதேச ரீதியாகும் மக்களை பிரித்து அதில் அவா் குளிகாய சில குழுக்களை நிறுவினாா்.


