பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கல் - டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சைக்கு வெற்றி

 க.கிஷாந்தன்-

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை 26.01.2016 அன்று மேற்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாதனைப்படைத்துள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனக்கு வயிற்று வலி என நீண்ட காலமாக அவதியுற்று வந்த இப்பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றுள்ளார்.

இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்க்கு ஒளி கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் இப்பெண்ணின் வயிற்றில் பாரிய கல் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு 26.01.2016 அன்று இவர்க்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறுவை சிகிச்சைக்குட்படுத்திய பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ மதிக்கதக்க கல் ஒன்று அறுவை சிகிச்சையின் ஊடாக பெறப்பட்டுள்ளது.

கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சையின் ஊடாக வைத்தியசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறான அறுவை சிகிச்சையின் ஊடாக பாரிய கல் எடுத்திருப்பது வைத்தியசாலைக்கு சாதனையாகும்.

அதேவேளை சிகிச்சைக்குட்படுத்திய பெண் உயிருடன் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை பாரிய வெற்றியை தந்திருப்பதாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிரி தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -