ஜனாதிபதி மைத்திரியின் மருமகனின் கார் - விலை 14 கோடிக்கு மேல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் ஒருவர் உலகில் மிகவும் பெறுமதியான வாகனங்களில் ஒன்றான Maybach ரக கார்கள் இரண்டை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த ரக கார் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை ரூபா பெறுமதியில் 14 கோடிக்கும் மேல் எனவும் கூறப்படுகிறது.

இந்த ரக வாகனங்கள் சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 300 கிலோ மீற்றர் தூரத்தை சென்றடைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ச ஆட்சியில் அவரது புதல்வர்கள் நடந்து கொண்ட விதம், அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து, அதற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் அதிகாரத்தை கோரிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில்,

ராஜபக்ச புதல்வர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், தற்போதைய ஜனாதிபதியின் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட தொடங்கியுள்ளமைம அரசியல் துறையில் பேசப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -