மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரமாண்டமான மீலாத் ஊர்வலங்கள்..!

ஏ.எம்.றிகாஸ்-
றைதூதர் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குர்ஆன் மதரசாக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த பிரமாண்டமான இரண்டு ஊர்வலங்கள் 24.12.2015 காலை ஏறாவூரில் நடைபெற்றன.

21 குர்ஆன் மதரசாக்களைச் சேர்ந்த சுமார் 750 மாணவர்கள் இந்த ஊர்வலங்களில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் -சத்தாம் ஹுஸைன் மாதிக்கிராமம்- பைஸானுல் மதீனா மதரசா முன்றலிலிருந்து மௌலவி ஐ.அப்துல் றஹீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஊர்வலம் தாமரைக்கேணி வழியாகச் சென்று மீண்டும் ஆரம்ப இடத்தில் நிறைவடைந்தது.

இதேவேளை வாளியப்பா கிராம பிரதேசத்திலிருந்து மௌலவி எம்எம் அறூஸ் தலைமையில் ஆரம்பமான மற்றுமோர் ஊர்வலம் பிரதான வீதி வழியாக மீண்டும் வாளியப்பா பிரதேசத்தை அடைந்து அங்கு நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றார்களும் கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவண்ணம் சென்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -