இஸ்லாம் ஒற்றுமையையும், அமைதியையும் வலியுறுத்தும் மார்க்கம் - பிரதமர் ரணில்

முஸ்லிம்களால் இன்று மீலாதுல் நபி தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

இறைத்தூதர் முகமது நபி அவர்கள் பிறந்த தினதை ஒட்டி இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

இதற்காக நாடெங்கிலும் கலைக்கலாசர நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இதற்கிடையில், இறைத்தூதர் முகமது நபி அவர்களின் போதனைகளின்படி, இந்த தினம் சமாதானமும், ஒற்றுமையும் ஏற்படுத்தப்படும் தினமாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீலாதுல் நபி தினமானது, சமுகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை உணர்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீலாதுல் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தினம் அனைத்து முஸ்லிம்களுக்கு முக்கியமான தினமாகும்.

இஸ்லாம், ஒற்றுமையையும், அமைதியையும் வலியுறுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -