சவுதி அரேபியாவில் இலங்கை பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
இதன்போது சவுதி அரேபிய உயர்ஸ்தானிகருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. சவுதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவை அங்கிருந்த பொறுப்பதிகாரி ஒருவர் பொறுப்பேற்றார்.
அதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய சங்க சம்மேள உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தது.


