எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில்; ஒருவராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரியொருவர், தெரிவித்தார்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
