அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாநாட்டில் சம்மாந்துறை ஜலீல் ஜீக்கு கௌரவிப்பு..!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி- 
நிந்தவூரில் நாளை மாலை (25-12-2015) நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20தாவது ஆண்டு நிறைவு மாநாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜலீல் ஜீ கௌரவிக்கப்படவுள்ளார். 

இவர் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நவமணி - தினக்கதிர் - வெளிச்சம் ஆகிய பத்திரிகைகளினூடாக செய்தியாளராகவும் கட்டுரையாளராகவும் எழுத்துப்பணியை ஆரம்பித்தார். 

பின்னர் இடி - தேடல் வெளிச்சம் - தினபதி - தினமணி - யாழ் உதயன் - யாழ் வ்ழம்புரி - ஈழ நாதம் - விடிவெள்ளி - தினகரன் - வீரகேசரி -ஆகிய பத்திரிகைகளிலும் பிராந்திய செதியாளராகவும் எழுதத் தொடங்கி சுடர்ஒளி- பத்திரிகைகளின் உதவி ஆசிரியராஹவும் அசரா சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் பணீயாற்ரியவர். 

மேலும் சிகரம் வானொலியின் பணிப்பாளராகவும், இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாக முகாமைத்துவ பணிப்பாளராகவும் இன்றுவரை கடமையாற்றுகின்றார். 

இவர் சென்ஜோன் முதலுதவி அமைப்பின் மெடலியன் தேசிய விருதினை -அதி மேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தவினாலும், சாரனிய இயக்கத்தில் அதிஉயர் ஜனாதி விருதை - அதி மேதகு ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினாலும் , சர்வோதய இயக்கதில் சுவர்ணபத்ம சம்மான விருதினை - அதி மேதகு ஜனாதிபதி டி.பி . விஜயதுங்கவினாலும், இளைஞர் சேவைகள் மன்றத்தில் சிறந்த இளைஞ்சனுக்கான தேசிய விருதினை - அதி மேதகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமரத்துங்கவினாலும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபிதராகவும், பிரதம செயற்பாட்டாளராகவும், தலைவராகவும் இலக்கிய பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -