கங்காராமையில் ஒன்று சேர்ந்த மஹிந்த மற்றும் ரணில்..!

கொழும்பு, கங்காராமையில் நேற்று நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

கங்காராமையின் விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த விசேட வழிபாட்டு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழிபாடுகளின் பின்னர் மஹிந்தவும் , ரணிலும் சற்று நேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் ஒன்றாகவே சென்று இருவரும் விகாராதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

கங்காராமை விகாரையின் நிர்வாக உறுப்பினர் குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முக்கிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -