எம்.வை.அமீர் -
நிந்தவூர் கமு/ கமு/அல் - அஷ்றக் (ம.ம.வி) தேசிய பாடசாலையில் ஜனாதிபதி பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 23.11.2015 அன்று பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபீர் அவர்களின் தலைமையில்இடம்பெற்றது.
இதில் சுற்றாடல் உத்தியோகத்தர்களான கே.எல். அலி ஹசன், எம்.ரீ.எம். றியாத், ஏ.எச்.றியாஸ்; மற்றும் சுற்றாடல் பொறுப்பாசிரியையான எஸ்.எச்.எம். உம்மு ஐமன், பிரதி அதிபர்களான எம்.ரீ. அபுல் ஹுதா, எம்.ஐ. நூறுதீன், ஏ.எம்.. ஹில்மி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஏ.எச். இன்பாசா ஹமீட்டின்; பெற்ரோர்களான எம்.ஐ.எம்.அப்துல் ஹமீட், எஸ்.எல். சபீனா ஹமீட் ஆகியோரும். எம்.ஐ.ஏ. இஹ்ஜாஸ் உம் அவரின் தாயாரான ஏ. சித்தி சூரியா அவர்களும், ஏ.எம். பாத்திமா சறாபா உம் அவரின் தந்தையாகிய ஏ. அச்சு முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டனர்.