திருகோணமலை கோமரங்கடவலவில் காய்ச்சல் காரணமாகா சிறுமியொருவர் பலி..!

எப்.முபாரக்-
திருகோணமலை, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு 7 மணியளவில் காய்ச்சல் காரணமாக கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கோரமங்கடவெல, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.உதேசிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம், தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை உயரதிகாரி தெரிவித்தார்.

இம்மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -