எப்.முபாரக்-
திருகோணமலை, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு 7 மணியளவில் காய்ச்சல் காரணமாக கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோரமங்கடவெல, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.உதேசிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம், தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை உயரதிகாரி தெரிவித்தார்.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
