ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் க.பொ.த (உ/த) கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் ஏ.ஏ.எம்.முப்லிஹ் தேசிய மீலாதுன் நபி தினப் போட்டியின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கான ' கிறாஅத்' போட்டியில் முதலிடம் பெற்று, அகில இலங்கை ரீதியிலான போட்டியிற்குத் தெரிவாகியுள்ளார்.
இவர் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்று இன்று அகில இலங்கை ரீதியிலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இவரைப் பாடசாலைச் சமூகம் பாராட்டி கௌரவிக்கயிருப்பதாக கல்லூரி பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்தல் பதியூ தெரிவித்தார்.
