கவிதை - சோபித தேரர்..!

சோபித தேரர்...
  +++++++++++

அதிகார வெறிகொண்ட
சதிகாரக் குழுவுக்கு
எதிராகப் போராடி
உதிராத புகழ் கொண்டோன்

தொப்பித் தலமைகள்
தப்ப வழி தேட,
தப்புக்கெதிராய்
சிப்பாய் போல் நின்றவன்

காவி உடை கொண்ட
பாவிகளுக்கெதிராய்
ஆவி நீங்கும் வரை
மாவீரனாய் வாழ்ந்தவன்.

ஆட்சி பிரள
சாட்சியாய் நின்றவன்
காட்சியை மாற்றியவன்
கட்சியை சாராதவன்

புதிய ஆட்சி இங்கு
உதயம் ஆன பின்னும்
பதவியோ உதவியோ
எதுவும் கேட்காதவன்.

இந்த மண்ணிலே
அந்த மனிதரின்
சுந்தர நினைவுகள்
எந்நாளும் உயிர் வாழும்

காத்தான்குடி நிஷவ்ஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -