தேசிய துக்க தினத்தில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் கடை மட்டும் திறந்து வியாபாரம்...!

செய்தியாளர்- க.கிஷாந்தன்-
றைந்த கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு 12.11.2015 அன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாட்டில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்களும் 12.11.2015 அன்றைய தினம் மூடப்பட வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் அந்தவகையில் மலையகத்தில் அனைத்து பாகங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் அட்டன் நகர பகுதியில் அட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் கடை மட்டும் திறந்து வியாபாரம் செய்தார்கள்.

இது தொடர்பாக நாம் மேற்படி மீன் கடை முகாமையாளரிடம் கேட்டபோது…

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன தலைமையகத்தில் தனக்கு திறந்து வியாபாரம் செய்யும்படி உத்திரவிட்டதன் காரணமாகவே தான் திறந்து வியாபாரம் செய்ததாக அவர் தெரிவித்தார்.

எனினும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அட்டன் பகுதியில் உள்ள ஏனைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -