யானைத் தாக்குதலுக்கு உள்ளானார் பொத்துவில் நீர்ப்பாசன ஊழியர்..!

எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
ம்பாறை பொத்துவில் பிரதேச நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமை புரியும் சீ.பீ.அலியார் (வயது38) என்பவர் தனக்கு வழங்கப்பட்ட இறத்தல் குளப் பராமரிப்புக்காக சென்று திரும்பு வழியில் நேற்று மாலை யானையின் பிடிக்கு உள்ளாகி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

வேலை முடிந்து குறித்த பகுதி விவசாயி ஒருவருடன் வீடு திரும்பும் வழியில் காட்டுக் ஒழிந்திருந்த யானை இழுத்துச் சென்று தாக்க முற்பட்டுள்ளது. இவ்வேளை குறித்த ஊழியர் சிறு தாக்குதலுடன் மயிரிழையில் உயிர் காப்பற்றப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -