அரசாங்கத்துக்கு NDPHR கட்சியின் ஒரு வேண்டுகோள்..!

நாடு செழிப்படைய வேண்டும் என்றால் ,மக்கள் வாழ்க்கைச் செலவு குறைக்கப் பட வேண்டும் என்றால் அரச ஸ்தாபனம்கள் நஷ்ட்டம் அடைவதை தவிர்க்க அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். வருடா வருடம் பல கோடிகளை இழக்கும் அரச ஸ்தாபனம்கள் அறிவும் அனுபவும் பெற்றோரால் நிர்வகிக்கப் பட வேண்டும் .பேரளவில் அரசியல் வாதிகளை அங்கொன்றும் இங்கு ஒன்றுமாகத் தூவி விடுவதை நிறுத்த வேண்டும் 

தனியார் துறைக் கம்பனிகள் லாபத்தைக் கொட்டி அதில் அரசாங்கத்துக்கு வரியை அள்ளி இறைக்கிறது , அதே நேரம் அரசாங்க ஸ்தாபனம்கள் நஷ்ட்டம் அடைந்து அதை அடைக்க வரிப் பணத்தை சுருட்டி எடுக்கிறது. இந் நிலைமை ஏற்படக் காரணம் என்ன ?

தனியார் துறைக் கம்பனிகள் அத் துறைசார் அறிவும் அனுபவமும் பெற்றோரால் நிர்வகிக்கப் படுகிறது ,ஆனால் அரச ஸ்தாபனம்கள் அத்துறைசார்பு அறிவில்லா அனுபவம் இல்லாதவர்களை நிர்வகிக்க தேர்வு செய்கிறது .

இறுதியில் இதன் தாக்கம் மக்கள் மீது வரிச்சுமை , இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் வாவா கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -