ஆங்கில மொழி தினப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முதலிடம்...!

அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்வியமைச்சு அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்த தேசிய ஆங்கில மொழி தினப் போட்டியின் எழுத்தாக்கப் போட்டியில் ( Creative writing) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எம்.ஏ.எம்.கய்ஸான் முதலாம் இடம்பெற்று கல்லூரிக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் இம்மாணவன் கல்முனைக்குடியைச் சேர்ந்த இக்கல்லூரியின் பழைய மாணவரான டாக்டர் எம்.ஏ.ஸி.எம். அமீன் , இக்கல்லூரியிலிருந்து முதன்முதலாக மருத்துவக்கல்லூரிக்கு பிரவேசித்த முதல் மாணவியான டாக்டர் நிஜாமியா அமீன் தம்பதிகளின் புதல்வராவார்.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் மேற்பார்வையில் ஆங்கிலபாட பொறுப்பாசிரியர்களான எஸ்.ஐ.எம்.றபீக் மற்றும் எம்.எப்.றிஸ்வி ஹாதிம் ஆகியோரின் வழிகாட்டலில் இம்மாணவன் இந்த வெற்றியினை பெற்றுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -