பழுதடைந்து அழுகிய மரக்கறிகளை விற்பனைக்காக கொண்டு சென்ற லொறி சுற்றிவளைப்பு..!

ந.குகதர்சன்-
வாகரை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும், வாகரைப் பிரதேச சபையின் வருமான பரிசோதகரும் இணைந்து மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு சென்ற லொறியிலிருந்த ஒரு தொகுதி பாவனைக்குதவாத பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த மரக்கறிகள் பழுதடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், வாகரைப் பிரதேசத்தில் கிராமம் கிராமமாக சென்று வழமையாக இவ்வியாபாரம் நடைபெற்று வருவதாகவும்; அறிய முடிகின்றது.

கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்த ஊறுகாய் மற்றும் சில பொருட்களுக்கு காலாவதி திகதி இடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் வாகரைப் பிரதேச சபையின் வருமான பரிசோதகர் தி.கோபிநாத் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரமேஸ் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.சந்திரமோகன், எஸ்.அமிர்தாப் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட மரக்கறிகள, உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம் என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -