மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு..!

க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – பெற்ரோசோ தோட்டத்தில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களைத் தேடும் முயற்சியில் பொகவந்தலாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீபாத வனப்பகுதியில் நடமாடும் மரை ஒன்று இரை தேடி பெற்ரோசோ தோட்டப் பகுதிகளுக்கு செல்வது வழமை. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட சந்தேக நபர்கள் 07.10.2015 அன்று புதன்கிழமை மரையை வேட்டையாடியுள்ளனர்.

வேட்டையாடப்பட்ட மரையை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்தனர். எனினும் பொலிஸாரை அவதானித்த சந்தேக நபர்கள் வேட்டையாடிய மரையை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

வேட்டையாடப்பட்ட மரையை வனப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளதோடு, சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

இதேவேளை வேட்டையாடப்பட்ட மரை சுமார் 30 கிலோகிரேம் எடைகொண்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -