லிந்துலையில் மண்சரிவு - 15 பேர் பாதிப்பு

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தலாங்கந்தை தோட்டத்தில் 18ம் திகதி இரவு 10 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் 04 வீடுகள் சேதமடைந்துள்ளன.

எனினும் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. இதனால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கடும் மழை பெய்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குடியிருப்புகள் அமைந்துள்ள பின் பகுதியில் அதி உயரமான மண்மேடு காணப்படுவதால் தொடர்ச்சியாக சரிந்து விழ கூடிய அபாயநிலை தோன்றியுள்ளது.

இவ்வணர்த்தம் இடம்பெற்றபோது வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் முன் அறையில் இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உயிராபத்துக்கள் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை தோட்டத்தில் உள்ள கோயில் மண்டபத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -