எஸ்.எச்.எம்.வாஜித்-
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 16வது வருட ஞாபகார்த்த நாளான நேற்று (16)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கெளரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் 130 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
தலைவரின் ஞாபகார்த்த நாளில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த சமூக பணி தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் இதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறான சதகத்துல் ஜாரியா திட்டத்தை வருகை தந்த பிரமுகர்கள் யாவரும் வாழ்த்தி சென்றனர்.



