ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முதல்தடவையாக கலந்துகொண்டுள்ளார்.
நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபை அமர்வுக் கூட்டம் ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை புனித பாப்பரசர் நிகழ்த்தினார்.
நிலைபேறான அபிவிருத்தி-2015 எனும் தொனிப்பொருளில் ஆரம்பமாகியுள்ள இந்த பொதுச்சபை அமர்வில் 150 உலக நாடுகளின் தலைவர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான மங்கள சமரவீர, கலாநிதி விஜேதாச ராஜபக்ச, ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

