தேவையற்ற அமைச்சுப் பதவிகள் அதிகரிப்பு - ஜே.வி.பி

தேசிய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் சில அமைச்சுப் பதவிகள், நட்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. 

ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

சிலரின் மனம் கோணாதிருக்கும் பொருட்டு இவ்வாறான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மக்களின் தேவைக்கு ஏற்பவே அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் தேவையற்ற வகையிலும், சிலரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்றும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சில அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -