எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்களை தனது கட்டளைக்குள் வைத்து கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற ஒன்றியத்திடம் மற்றும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்வதற்கு ஆயத்தம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இவ் அடக்குமுறை செயல்முறை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இதன் ஊடாக ஜனநாயகம் மீறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.