ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மேலும் வலுவிழக்க செய்வதற்காக மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் தலைமைத்துவத்தில் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்திற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேசிய அரசாங்கத்திற்கு எதிரான உறுப்பினர்கள் முதலில் நாடாளுமன்றில் எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து சுயாதினமாக பிறிதொரு முன்னணியில் செயற்பட ஆயத்தமாகின்றனர் என தெரியவந்துள்ளது.
இதுவரையில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களின் கையொப்பத்துடனான கடிதத்தை இம் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்து எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர்.
அந்தக் குழுவுடன் முன்னணியின் பங்குதாரரான மஹிந்த ராஜபக்ச தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழு அதனுடன் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.