சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களை மீள அமைத்து வினைத்திறனுடன் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களின் ஆலோசனைக்குழுக்கள் இயங்காமல் இருப்பதனால் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண அமைச்சுக்களின் நடவடிக்கை தொடர்பாக பகிரங்கமாகவே ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவிக்கப்படும் கருத்துக்களால் நமது கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுக்கப்பட்ட இன உறவுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகுவதுடன், சமூகங்களுக்கிடையே விரிசல்களும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதனால் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களை மீள அமைத்து வினைத்திறனுடன் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து இன்று 22ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் தனிநபர் பிரேரனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
