போதைப்பொருள் வில்லைகளை வைத்திருந்தவர் பொத்துவிலில் கைது..!

போதைப்பொருள் வில்லைகளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் பொத்துவில் பிரதேச சுற்றுலா விருந்தகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை தொகுதி மோசடி தவிர்ப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில் சந்தேகத்திற்குரியவர் குறித்த விருந்தகத்தில் நடன கலைஞராக பணியாற்றுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட 25 வயதான இளைஞர் இன்று பொத்துவில் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -