அஸ்ரப் ஏ சமத்-
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளா் சங்கம் ” நேற்று(04) வெள்ளவத்தை குலோபா் டவா் ஹோட்டலில் இரண்டு முஸ்லீம்கள் பற்றிய நுால்களை வெளியீட்டது.
இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி, மற்றும் முஸ்லீம் விவாவக விவாகாரத்துச் சட்டமும் என்று பல மாா்க்க அறிஞா்களது ஆக்கள் ஒன்று சோ்த்த நுால்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நுாலில் வணக்க வழிபாடுகளில் சமத்துவம், இஸ்லாமிய நோக்கில் திருமனம், நெருங்கிய வாழ்க்கைத் துனை வன்முறை, இஸ்லாத்தில் பலதாரத் திருமணம் ஒரு பண்முக நோக்கு போன்ற பல்வேறு தலைப்புக்களில் நளிமியா பட்டதாாிகள் கட்டுரைகளை வரைந்துள்ளனா்.
இதனை இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளா் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளா் எம்.ரி.ரஸ்மின் சட்டத்தரணி ஹஸனாஹ் சேகுஇஸ்சதீன் தொகுத்து நுாலக வெளியீட்டுள்ளனா்.
இந் நுால் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் கலந்து கொண்டாா். அத்துடன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் முஜிபு ரஹ்மானிடம் நீதி அமைச்சா் விஜயதாச ராஜபக்சவினைச் சந்தித்து முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றிய சட்டச் திருத்தங்களை முன்னெடுக்குமாறு கடிதம் கையளிக்கப்பட்டது.
சட்டத்தரணி சபானா ஜீனைதீன் மற்றும் முன்னாள் மீள்பாா்வை ஆசிரியா் சிறாஸ் மசுர் ஆகியோறும் நுால் பற்றி உரையாற்றினாா்கள்.




