கோத்தபாய மற்றும் நாமல் விசாரணைகளுக்காக முன்னிலை..!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளனர்.

நிதி மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக இவ்வாறு முன்னிலையாகியுள்ளனர்.

இரண்டு வெவ்வேறு நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக இன்று காலை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் கோத்தபாய மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

கோத்தபாயவும் நாமலும் ஏற்கனவே சில தடவைகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்கு மூலங்களை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -