பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கருணா சிக்குவாரா?

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சரும், புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருணாஇந்தப் படுகொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.2005ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று, நத்தார் ஆராதரனைகளில் கலந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டிருந்தது.

எதிர்வரும் நாட்களில் கருணாவை குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்து கொலை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கொலை செய்யப்பட்ட காலத்தில் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப்  பிரிவின் விசேட காவல்துறைப் பிரிவு ஒன்று இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.NEWS- GTN

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -