எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் சன்பிளவர் இளைஞர் அமைப்பின் அயராத முயற்சியின் பயனாக இறக்காமம் வரிப்பத்தான்சேனை ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 75 வறிய குடும்பங்களுக்கான மலசல கூடங்கள் பிளான் ரீ லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.
இதன் நிர்மானப்பணியின் 2ம் கட்ட வேலைகளை பார்வையிடுவதற்காக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பிளான் ரீ லங்கா நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர்கள் பார்வையிட்ட நிகழ்வு அன்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் கலந்து கொண்டதோடு பிரதம அதிதிகளாக சுகாதார அலோசகர் தயாபால, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.முஹம்மட் மற்றும் பிளான் ரீ லங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்து சன்பிளர் அமைப்பிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்