இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 149வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு தின வைபவம் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன்இ பொலிஸ் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பாக கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் கடந்த கால யுத்தத்தில் உயிர்நீத்த பொலிஸாரை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது பொலிஸ் வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் சர்வமத வழிபாடுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும்இ பொது மக்களும் கலந்து கொண்டனர்.