முன்ஜென்ம கர்ம பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை நிற்கின்றன.
ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும், மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பல பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும்.
இன்று காரைதீவு நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்பட்டது. இதன் போது பல பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.இதன் போதான நிகழ்வுகளை படங்களில் காணலாம்.