எம்.வை.அமீர் -
கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாடில் கவியரங்கும் இப்தார் நிகழ்வும் சாய்ந்தமருது மல்ஹார்சம்ஸ் மகாவித்தியாலயத்தில் (2015-07-10) கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் தேசகீர்த்தி மருதூர் ஏ.எல்.அன்சாரின் வழிநடத்தலில் சங்கத்தின் தலைவர் சமூகச்சுடர் முபாரக் அப்துல் மஜீட் (உலமா கட்சி தலைவர்) தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக கலாச்சார உத்தியோகத்தர் தௌபீக் மற்றும் இசட்.எல்.எம்.நதீர் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கவியரங்குக்கு தலைவராக கலாபூஷணம் ஏ.பீர்முகம்மட் தலைமை தாங்கினார். இங்கு பிரபல்யமிக்க கவிஞர்கள் நோன்பின் மாண்பு பற்றிய கவிகளை இங்கு அரங்கேற்றினர்.




