அட்டாளைச்சேனையில் பொலிஸாரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்..!

ட்­டா­ளைச்­சேனை பிர­தான வீதியில் வைத்து நேற்று முன்­தினம் பொலிஸாரை தாக்கி காய­மேற்­ப­டுத்­திய சந்­தேக நபர்கள் மூவரை கைது செய்­த­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்ற பதில் நீதி­பதி திரு­மதி அகீலா முன்­னி­லையில் அன்­றைய தினம் ஆஜர்­ப­டுத்­திய போது நீதி­பதி மூவ­ரையும் எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

அட்­டா­ளைச்­சேனை பிர­தான வீதியில் நேற்று முன்­தினம்(பெருநாள் தினத்தன்று)  அக்­க­ரைப்­பற்று பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரி­வினர் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்கும் போது தலைக்­க­வசம் அணி­யாமல் ஒரு மோட்டார் சைக்­கிளில் 3பேர் சென்­றதை அவ­தா­னித்த பொலிஸார் அவர்களை நிறுத்­து­மாறு சைகை­காட்­டிய போதும் நிறுத்­தாமல் சென்­றுள்­ளனர்.

மோட்டார் சைக்­கிளை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் மோட்டார் சைக்­கிளை தடுத்து நிறுத்தி விசா­ரணை செய்ய முற்­பட்ட போது பொது மக்­களை ஒன்று திரட்டி பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

இத்­தாக்­கு­தலில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் தர்­ம­ரத்ன என்­பவர் காய­ம­டைந்து அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவும் இத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித் தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -