மூவின சமூகமும் கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலக இப்தார் நிகழ்வு!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும், விஷேட மார்க்கச் சொற்பொழிவும்,இன்று (09-072015)கல்முனை திரு இருதைய நாதர் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மூவின சமூகங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை  பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.ஏ.அலி அக்பர் விஷேட மார்க்கச் சொற்பொழிவாற்றினார். அம்பாறை மாவட்டச் செயலாளர் திரு துசித்த பி.வனிகசிங்க பிரதம அதிதியாக் கலந்து கொண்டார். 

விஷேட அதிதிகளாக அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.அமீர், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கொன்,கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்யு அப்துல் ஹப்பார்,அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகளாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடவியலார்கள் உள்ளீட்ட முன்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -