கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில்மேலும் கூறுகையில்,
இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானது.இதை சில பேரினவாதக் கட்சிகள் ஏற்பதில்லை.ஆனால்,ஐக்கியதேசிய கட்சி இதற்கு முற்றிலும் மாறுபட்டது.மூவினங்களையும் சமமாகவே மதிக்கின்றது.கட்சிக்குள்ளேயே அந்தநிலைமைய நாம் பார்க்கலாம்.
கடந்த காலங்களில் சிறுபான்மை இன மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில்ஐக்கிய தேசிய கட்சி வகுத்த வியூகம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறுபான்மை இன மக்கள் அனுபவித்துவந்த கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அது நிரந்தரமான முற்றுப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றால் நாம் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடமேற்றவேண்டும்.அதுதான் எமக்கு நிரந்தர பாதுக்காப்பைக் கொண்டு வரும்.
அதுபோக,கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களும் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.நான்30வருடங்களாக அந்த மக்களின் துன்பங்களை நீக்கி வருகிறேன்.என்னால் முடிந்த வரை சேவை செய்துவருகின்றேன்.
அந்தச் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கு இன்று எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கிடைத்துள்ளது.அது எனக்குரிய வாய்ப்பு அல்ல.கொழும்பு மக்களுக்கான வாய்ப்பு.அந்த வாய்ப்பை நாம் அனைவரும்பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் கொழும்பு மக்களின் வாழ்வில்நல்லதொரு மாற்றம் ஏற்படும்.அந்த நல்ல மாற்றத்தை நான் நிச்சயம் ஏற்படுத்துவேன். என்றார்.
Feroza Musammil’s Media unit
